எனது கவிதை
வளரும் பூச் செடியில்
புதிதாக மலர்ந்த மொட்டு...
பருவம்
சூரிய ஒளி வெப்பத்தில்
சிகப்பு நீர் உப்பு நீரானது....
விவசாயி
அழகிய ரோஜாக் கூட்டத்திற்கு
இடையே மலர்ந்த புதிய மலர்
என்னவள்
நடுப்பகல் சூரிய வெப்பத்தில்
பச்சையிலை கருகியது
உணவில்லா ஏழை
இனமும் இல்லை, மதமும் இல்லை
உறவும் இல்லை, காதலும் இல்லை
நட்பு
புதிதாக பூத்த பூவின் வாசம்
அவள் என்னை கடந்து சென்றால்
மார்கழி மாசத்து பனி துளி
என் உள்ளங்கையில் விழுந்து
அசைந்தாடியது
அவள் பார்த்த முதல் பார்வை
0 --------:
Post a Comment
<< -------